சிரேஷ்ட ஊடகவியலாளர் கமனி அல்விஸ் காலமானார்

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினமின ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளரான கமனி அல்விஸ் நேற்று தமது 61 வது வயதில் திடீர் மரணமடைந்தார். சிரேஷ்ட ஊடகவியலாளரான சுனில் தயா அல்விஸின் மனைவியான அவர் ரவீந்திர அல்விஸ். சுச்சினி அல்விஸ் ஆகியோரின் தாயாருமாவார்.

அவரது பூதவுடல் தற்போது மாலபே விஹாரை மாவத்தையிலுள்ள 225/45 ஆம் இலக்க இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பொரளை கன த்தை மயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன. 35 வருட காலமாக ஊடகத்துறையில் பணியாற்றும் திறமை படைத்த ஊடகவியலாளரான கமனி அல்விஸ் 90 காலகட்டங்களில் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்தார். முதலில் ‘ஜனதா’ பத்திரிகையில் பணியாற்றிய அவர், அதன் பின்னர் தினமின ஆசிரிய பீடத்தில் தொடர்ச்சியாக பணியாற்றி வந்துள்ளார். பாதுகாப்பு மற்றும் பொலிஸ் துறைகளில் செய்தி சேகரிக்கும் போது அவர் தமது முழுமையான திறமையை வெளிப்படுத்தி அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். கடந்த காலங்களில் அரசியல் தொடர்பான செய்தி சேகரிப்பு செயற்பாடுகளின் போது அர்ப்பணிப்புடனும் பெரும் முயற்சியுடனும் சேவையாற்றி சகலரது நற்பெயரையும் தேடிக்கொண்டவர்.

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை