பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி உவைஸ் பாத்திமா அனா ஆங்கில தினப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளார்.
இவர் கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம் மட்டம் வரை வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார். எதிர் வரும் 19ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
(மருதமுனை தினகரன் நிருபர்)
Wed, 10/16/2019 - 06:00
from tkn