கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இயக்குநராக அனில் கும்ப்ளே

இந்தியாவில் நடைபெறும் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 தொடரில் இடம்பெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் செயற்பாடு இயக்குநராக இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் வியாழக்கிழமை நடந்த பஞ்சாப் அணியின் நிர்வாக கூட்டத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுவரை ஐ.பி.எல். சம்பியன் கிண்ணத்தை ஏந்தாத பஞ்சாப் அணி, அனில் கும்ப்ளேவின் நியமனத்தால் உற்சாகமடைந்துள்ளது.

மேலும், அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் ஜோர்ஜ் பெய்லி துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கும்ப்ளே இதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட ஐ.பி.எல் அணிகளுக்கு இதற்கு முன் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

இதுதவிர, சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை, இதற்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளராக செயற்பட்டுவந்த அனில் கும்ப்ளே, 2017ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண தொடரின் போது, அணித்தலைவர் விராட் கோஹ்லியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.

Sat, 10/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை