அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயம் மாகாண மட்டத்திற்கு தெரிவு

அக்கரைப்பற்று வலய சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலய மாணவர்கள் 03 தங்கம் மற்றும் வெள்ளி, வெண்கலம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற அக்கரைப்பற்று வலய சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளில் அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலய தரம் 03 ஆண்கள் பிரிவில் 01ம் இடத்தினைப் பெற்று தங்கப் பதக்கத் தினையும், தரம் 03 பெண்கள் பிரிவில் 03ம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும், தரம் 04 ஆண்கள் பிரிவில் 02ம் இடத்தினைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும், தரம் 04 பெண்கள் பிரிவில் 01ம் இடத்தினைப் பெற்று தங்கப் பதக்கத்தினையும், தரம் 05 ஆண்கள் பிரிவில் 01ம் இடத்தினைப் பெற்று தங்கப் பதக்கத்தினையும் பெற்று மாகாணப் மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மதுல்லாஹ், பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.பஸ்மில், உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.அபுதாஹிர், எம்.ஏ. அம்ஜத்கான், இணைப்பாளர் ஐ.எல்.பாயிஸ் மற்றும் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(அக்கரைப்பற்று மத்திய நிருபர்)

Sat, 10/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை