தென்னாபிக்க அணி முன்னாள் வீரருக்கு 5 ஆண்டுகள் சிலை

சூதாட்ட வழக்கில் சிக்கிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 46 வயதான அவர் 2 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியாவில் பிறந்தவரான குலாம் போடி மீது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு கூறப்பட்டது.

2015ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த உள்ளுர் போட்டியின் போது அவர் ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் சிக்கினார். இதற்காக குலாம் போடிக்கு 20 ஆண்டுகள் வரை தடை விதித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.

குலாம் போடி மீதான சூதாட்ட வழக்கு பிரிட்டோரியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. அவர் மீது 8 விதமான ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யவுள்ளார்.

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை