கலிபோர்னிய காட்டுத்தீயினால் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெருங்காற்றின் காரணமாக மேலும் பல இடங்களுக்கு பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதை அடுத்து அந்தப் பகுதியில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வடக்கு சான்பிரான்ஸிகோவில் உள்ள 50 ஆயிரம் பேரை வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளுக்கு மின்சார சக்தியை வழங்கி வரும் பசிபிக் கேஸ் மற்றும் எலெக்ட்ரிக் முகாமை, அடுத்த 48 மணி நேரத்திற்கு மின்சாரத்தைத் துண்டிக்கப் போவதாகக் கூறி உள்ளது. இதன் காரணமாக 20 இலட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். இதுவரை இந்த காட்டுத்தீயின் காரணமாக 10,300 ஹெக்டேர் பரப்பளவிலான காடு எரிந்து நாசமாகி உள்ளது.

கடந்தாண்டும் கலிபோர்னியாவில் காட்டுத்தீ ஏற்பட்டது. அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, காலநிலை மாற்றத்துக்கும் காட்டுத்தீக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை விவரித்தது.

2018ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 3.15 பில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் சேதமாகின.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை