பப்புவா நியூ கினியா அணி ரி -20 உலகக் கிண்ண தொடரில் விளையாட தகுதி

அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ரி-20 உலகக் கிண்ண தொடரில் விளையாட பப்புவா நியூ கினியா அணி தகுதி பெற்றுள்ளது.ஐசிசி ரி- 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஒக்டோபர் 18-ம் திகதி முதல் நவம்பர் 15-ம் திகதி வரை நடக்கிறது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் முதல் இடம் பிடித்தது. இதனால் உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றது.

‘பி’ பிரிவில் அயர்லாந்து நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் ஓட்ட விகிதம் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்தது. இதன்மூலம் அயர்லாந்து அணியும் உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றது. இந்த இரண்டு அணிகளையும் தவிர மேலும் நான்கு அணிகள் குரூப் நிலைக்கு தகுதி பெறும். குரூப் நிலையில் இலங்கை, பங்களாதேஷ் உட்பட 8 அணிகள் மோதும். இதில் வெற்றிபெறும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை