டபிள்யூ.டி.ஏ எலைட் கிண்ண டென்னிஸ் தொடரில், பெலரஸ் வீராங்கனை ஆரினா சபாலெங்கா, இத்தொடரில் முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
சீனாவின் சூஹாய் நகரத்தில் நடைபெற்ற பெண்களுக்கே உரித்தான இத்தொடர், கடந்த 22ஆம் திகதி முதல் நேற்று வரை நடைபெற்றது.
நான்காவது அத்தியாயமாக கடினத் தரையில் நடைபெற்ற இப்போட்டித் தொடரின், இறுதிப் போட்டியின் முடிவினை தற்போது பார்க்கலாம்,
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலரஸ் வீராங்கனை ஆரினா சபாலெங்கா, நெதர்லாந்தின் கிகி பெர்டன்சை எதிர்கொண்டார்.
இரசிகர்களின் உச்ச எதிர்பார்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6- -4 என ஆரினா சபாலெங்கா போராடி கைப்பற்றினார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் இரண்டாவது செட், பரபரப்படைந்தது. இதில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் எகிறியது.
எனினும், முதல் செட்டில் காட்டிய அதே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய ஆரினா சபாலெங்கா, இரண்டாவது செட்டை 6--2 என எளிதாக கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.
from tkn