மூதூர் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) மாற்றுத் திறனாளி மாணவர்கள் கௌரவிப்பு

இவ் வருடம் 2019 நடைபெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மாகாணமட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டு மொத்தமாக 11 இடங்களைப் பெற்றுள்ளதுடன், 04 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ‘எங்களால் முடியும்’ எனும் சாதனையை ஈட்டிக் கொடுத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை அதிபர் ஏ.எச். பசீர் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் இவ் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களான எம்.எம். மஹீஸ், சி. தயானா மற்றும் எஸ். சகீரா ஆகியோர்களும் பங்கேற்றனர்,

(மூதூர் தினகரன் நிருபர்) 

 

Fri, 09/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை