தாய்லாந்தில் கயிறு இழுக்கும் போட்டி

பிரகாசித்த இராணுவ மகளிர் அணி

தாய்லாந்தின் அயோத்யா உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 14வது ஆசிய உள்ளக கயிறு இழுக்கும் 500 கிலோ கிராம் பிரிவின் கீழான போட்டியில் இலங்கை இராணுவத்தின் மகளிர் அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு, இலங்கை ஆண்கள் அணி போட்டியின் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. இப்போட்டிகள் இம்மாதம் 13ம் திகதியிலிருந்து 16ம் திகதி வரை இடம்பெற்றது.

இலங்கை ஆண்கள் அணியில் அங்கம் வகித்தவர்களுள் அதிகமானோர் இலங்கை இராணுவத்தின் விளையாட்டு வீரர்களாவர். அத்துடன் 14 வது ஆசிய உள்ளக கயிறு இழுக்கும் 2019ம் ஆண்டுக்கான வெற்றிக்கிண்ணப் போட்டியில் இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் திறமை, வேகம் மற்றும் பலம் என்பற்றிற்கான சம்பியன்களாகத் தெரிவாகின.

(புத்தளம் விஷேட நிருபர்)

Fri, 09/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை