விசேட தேவையுடையோருக்கு உதவிகள்

 கொழும்பு பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்கும் விசேட தேவையுடையோருக்கும் மோட்டார் சைக்கிள்கள்,நாற்காலிகள் வழங்கப்பட்டன. ஒல்கொட் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் நிலையத்துக்கு அருகில், கடந்த (20) வெள்ளிக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது. புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் அனுசரணையில், "இயலாதோருக்குக் கை கொடுப்போம்" என்ற தொனிப்பொருளில் இவர்களுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள்கள், சக்கர நாற்காளிகளை வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர்ரஹ்மான், கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க, மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பைரூஸ் ஹாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை