காணியை மக்களுக்கு பகிர்ந்தளித்தார் ஆனந்தசங்கரி

முல்லைத்தீவில் உள்ள தனது காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு குறிப்பிட்டு காணியின் ஆவணத்தை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் வீ.ஆனந்தசங்கரி கையளித்தார்.

சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தனது காணியின் ஆவணத்தையே அவர் அரச அதிபரிடம் கொடுத்தார்.

நேற்று பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்ற ஆனந்தசங்கரி குறித்த காணியை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தார். அப் பகுதியில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் குடும்பங்கள் மற்றும் காணி அற்றவர்களிற்கு குறித்த காணியை பகிர்ந்தளிக்குமாறு தெரிவித்தே இதனை கொடுத்தார்.

தொடர்ந்து சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள காணியை பார்வையிட்ட ஆனந்தசங்கரி, அங்கு வாழும் மக்களுடன் கலந்துரையாடியதுடன், காணி வழங்கல் தொடர்பில் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலான ஆவணம் ஒன்றினை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மக்களிடம் தெரிவித்தார்.

பரந்தன் குறூப் நிருபர்

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை