கைவிடப்பட்டுக்கிடக்கும் புதிய சந்தையை இயங்க வைக்க கோரிக்கை

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபையின் கீழ் உள்ள ஐயன்கன்குளம் கிராமத்தில் சுமார் இரண்டு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட

பொதுச்சந்தை, கடந்த ஐந்து வருடங்களாக எந்தவித பயன்பாடுமின்றிக் காணப்படுகின்றது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபையின் கீழ் உள்ள ஐயன்கன்குளம் கிராமத்தில் கடந்த 2012ம் ஆண்டு சுமார் 23 இலட்சம் ரூபா செலவில், நிர்மாணிக்கப்பட்டு இச்சந்தை திறந்து வைக்கப் பட்டது.

இதனால் இப் பகுதியில் வாழும் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

பிரதேசத்தின் தேவை கருதி பெருந்தொகை நிதியில் அமைக்கப்பட்ட இச்சந்தை கட்டடத் தொகுதியை இயங்க வைப்பதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(பரந்தன் குறூப் நிருபர்)

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை