இருபது ஏக்கர் காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க ஆனந்தசங்கரி நடவடிக்கை

சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள தனது காணியை மக்களுக்குப் பகிர்தளிக்க, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கான கோரிக்கை கடிதத்தை பிரதேச செயலாளருக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள, தனக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியையே ஆனந்தசங்கரி பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளார். இக்காணியில் 1988ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியிலிருந்து சுமார் 20 குடும்பங்களுக்கு மேலான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. எனினும், இக்காணிக்கான உரிமம் அவர்களுக்கு கிடைக்காததால் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் இவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இது குறித்து இம்மக்கள் வீ. ஆனந்த சங்கரியை சந்தித்து நிலைமைகளை எடுத்துவிளக்கினர்.

இதையடுத்தே தனது காணியை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு அவர் தீர்மானித்தார்.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலகத்திற்கு அறிவித்துள்ள வீ.ஆனந்தசங்கரி,காணிகளைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.

(கிளிநொச்சி குறூப் நிருபர்)

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை