எழுக தமிழ் பேரணிக்கு முழுமையான ஆதரவு

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் அமைப்பு அறிவித்தது.

இது தொடர்பாக நேற்யை தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ் அமைப்பின் தலைவி யோ.கனகரஞ்சனி இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

எழுக தமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கு எமது பூரண ஆதரவினை வழங்குவதுடன் இதில் தனிப்பட்ட மத, கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் அனைத்து தரப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும்.

இப்பேரணி தமிழ் மக்களின் குரலாக கருதியே நாம் பூரண ஆதரவினை வழங்குகிறோம். எதிர்மறையான, காழ்புணர்வுகளை கடந்து அனைவரும் இதில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Sat, 09/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை