திருக்ேகாவிலில் முதியோருக்கான இலவச வைத்திய முகாம்

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் சமூக சேவைப்பிரிவு முன்னெடுத்த முதியோர்களுக்கான இலவச வைத்திய முகாம் தம்பட்டை மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் (07) நடைபெற்றது.

திருகோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரனின் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதீஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இலவச வைத்திய முகாம் செயற்பாடுகளை பிரதேச செயலக சமூக அபிவிருத்தி பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் பர்மிலா தர்மரெத்தினம் வழி நடத்தினார்.

வைத்திய முகாமில் திருக்கோவில் வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தன், பல் வைத்தியர் ரி.திர்சாந்தி, ஆயுர்வேத வைத்தியர் அப்துல் கையூம் உள்ளிட்ட பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு வைத்திய பரிசோதனையை மேற்கொண்டதுடன், திருக்கோவில் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் கண இராஜரெத்தினம் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது இரத்தி பரிசோதனை, தொற்றுநோய் மற்றும் தொற்றாநோய் பரிசோதனைகள் ,பல்வைத்தியம் ஆயுர்வேத வைத்திய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இவ்வைத்திய முகாமில் அதிகளவான பொது மக்கள் கலந்து கொண்டு சிகிச்சையினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை