இரும்புக் கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு

யாழ். கோண்டாவில் பகுதியில் உள்ள  இரும்புப் பொருள் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் வாள்வெட்டில் படுகாயமடைந்ததை தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில், உப்புமடம் பகுதியில் உள்ள இரும்புப் பொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீதே வாள்வெட்டுக் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (06) மாலை 4.00 மணியளவில் குறித்த இரும்புப் பொருள் விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழு உரிமையாளர் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதேவேளை, வாள்வெட்டு தாக்குதலை நடத்திய கும்பல் தப்பித்துச் செல்லும் சி.சி.ரி.வி கமெராக் காட்சி பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

Sat, 09/07/2019 - 09:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை