கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

அவசர பராமரிப்பு வேலை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் 10ஆம் திகதி 18மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) காலை 9.00மணி முதல் இந்த நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை – மாபொல, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்தோடு வத்தளை, மஹர மற்றும் ஜா –எல பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுடன், கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட ஒரு பகுதியிலும் இவ்வாறு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Sat, 09/07/2019 - 09:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை