ஆஸியில் நடக்கும் ஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்ச்சர் உதவியாக இருப்பார்

பென் ஸ்டோக்ஸ்

ஆஷஸ் தொடரில் அறிமுகமாகி நான்கு போட்டிகளில் 22 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஆர்சரால், அடுத்த ஆஷஸ் கிண்ணத்தை வென்று தரமுடியும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் 29 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட் பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நான்கு போட்டிகளில் விளையாடிய ஆர்ச்சர் 22 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

ஆர்ச்சர் இந்த ஆஷஸ் தொடரை எப்படியும் இங்கிலாந்து அணி கைப்பற்ற உதவிகரமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியால் சம நிலை செய்ய மட்டுமே முடிந்தது. இந்நிலையில் 2021-22-இல் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல உதவிகரமாக இருப்பார் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

ஜோப்ரா ஆர்ச்சர் குறித்து துணைக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘என்னுடைய காலக்கட்டத்தில் ஆர்ச்சரை விட அதிக திறமைப்படைத்த பந்து வீச்சாளரை பார்த்ததாக நினைக்கவில்லை.

எங்களுடைய அணியில் அவர் இருப்பது சிறப்பானது. நாங்கள் 2021-22-இல் அவுஸ்திரேலியா சென்று விளையாடும்போது ஆஷஸ் தொடரை கைப்பற்ற உதவிகரமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிக் பாஸ் உட்பட பல்வேறு ரி 20 லீக்கில் விளையாடி வருகிறார். அது அவருக்கு வசதியாக இருப்பதாக கருதுகிறார். 90 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசினாலும் கூட, கட்டுப்பாட்டுடன் பந்து வீசும் திறமை பெற்றுள்ளார். உலகில் உள்ள எந்த இடத்திலும் அவர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்’’ என்றார்.

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை