சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

சம்மாந்துறை கல்லரிச்சல் கிராமத்துக்குள் ஞாயிற்றுக் கிழமை (31) புகுந்த காட்டு யானையொன்று வீட்டு மதில்களை சேதப்படுத்தி, பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை அழித்துள்ளதுடன், பொதுமக்களையும் விரட்டியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்புப் பிரதேசத்திற்குள் உட்புகுந்த காட்டு யானை வீட்டு மதில்களை உடைத்து நாசமாக்கியுள்ளதுடன், அவ்வீடுகளிலிருந்த பல பெறுமதியான பொருட்களையும், நெல் மூடைகள் மற்றும் பயிர்களையும் நாசப்படுத்தியுள்ளன.

இரவு வேளைகளில் காட்டு யானைகள் இப்பிரதேசத்தில் நடமாடுவதால் பல்வேறு இன்னல்களுக்கு தாம் முகம் கொடுத்து வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாத்து தம்மை நிம்மதியாக வாழச் செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்)

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை