காசா எல்லையில் மற்றொரு பலஸ்தீனர் சுட்டுக்கொலை

காசாவில் இஸ்ரேலுடனான எல்லை பகுதியில் பலஸ்தீனர் ஒருவர் மீது இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு துருப்புகள் பதிலுக்கு சூடு நடத்தியதில் அவர் கொல்லப்பட்டார்.

மர்வான் நசார் என்ற 26 வயது இளைஞனே நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்போது இஸ்ரேலிய பீரங்கி ஒன்று பலஸ்தீன போராட்டக் குழுவான ஹமாஸின் முகாம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் இஸ்ரேல் தரப்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

காசா எல்லையில் இடம்பெற்று வரும் பதற்றத்தின் தொடர்ச்சியான ஒன்றாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனரக ஆயுதங்களுடன் இருந்த நான்கு பலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தது. காசா எல்லைப் பகுதியில் கடந்த 2018 மார்ச் மாதம் தொடக்கம் இடம்பெற்று வரும் பதற்றங்களில் இஸ்ரேலின் துப்பாக்கிச் சூடுகளில் குறைந்தது 302 பலஸ்தீனர் கொல்லப்பட்டனர்.

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை