நோர்வே பள்ளிவாசலுக்குள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

நோர்வேயில் பள்ளிவாசலுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைநகர் ஒஸ்லோ புறநகர் பகுதியில் உள்ள அல் நூர் இஸ்லாமிய மையத்திலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரின் வீட்டிலும் பெண் ஒருவரின் சடலம் ஒன்று பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 வயது கொண்ட நோர்வே பிரஜை ஒருவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் பொலிஸார் அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அந்த நபர் தனித்தே இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த பள்ளிவாசலின் உறுப்பினரான 75 வயது ஆடவர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் நியூசிலாந்து கிறிஸ்சேர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை