புத்தளம் முதல் பொத்துவில் வரை கடுங்காற்று மழை, கடல் கொந்தளிப்பு

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணி க்கு 70-,80கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் உயர் அலைகளுடனும் காணப்படும். வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60,-70கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.  அடுத்துவரும் இருதினங்களுக்கு வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்  அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 30,- 40கிலோ மீற்றர் வரை காணப்படும். 

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் மணிக்கு 50,-60கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.   ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 40,-50கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Mon, 08/12/2019 - 12:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை