போதையிலிருந்த 180 சாரதிகள் கைது

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, நேற்று (10) காலை 6.00மணி முதல் இன்று (11) காலை 6.00மணி வரையான 24மணித்தியாலத்தில், மது போதையில் வாகனம் செலுத்திய 180சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் கடந்த ஜூலை மாதம் 05ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, கடந்த ஜூலை 05ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 8,147சாரதிகள்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

Sun, 08/11/2019 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை