பாராளுமன்றத்திற்கு குழந்தையை எடுத்து வந்த எம்.பி வெளியேற்றம்

கென்ய நாட்டு எம்.பி ஒருவர் தனது ஐந்து மாதக் குழந்தையை பாராளுமன்றத்திற்கு எடுத்துச் சென்றதால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கென்ய பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றக் கட்டடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட அவசரத்தினால், சுலேக்கா ஹசானின் குழந்தையை வேறு யாரும் பார்த்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது. பாராளுமன்றக் கட்டடத்தில் குழந்தைப் பராமரிப்பு நிலையம் இல்லாததால், குழந்தையை பாராளுமன்றக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார் சுலேக்கா.

விதிமுறைகளின்படி, பாராளுமன்றக் கூட்டத்தில் குழந்தை உட்பட வெளிநபர் யாருக்கும் அனுமதியில்லை. சுலேக்காவின் நடத்தை மிகவும் அவமானத்திற்குரியது என மற்ற ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

தாய்மார்களுக்கு ஏற்ற வசதிகள் பாராளுமன்றத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் சுலேக்கா.

அண்மைக்காலமாக உலகெங்கும் உள்ள பெண் அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் தம் மூன்று மாதக் குழந்தையை ஐக்கிய நாட்டுப் பொதுச்சபைக்குக் அழைத்துச்சென்றார்.

Fri, 08/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை