பழைய மாணவியரின் வலைப்பந்து போட்டியில் மெத்தா அணி வெற்றி

கொழும்பு ஆனந்த பெண்கள் பாடசாலையின் பழைய மாணவியர்களின் சங்கம் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்த வலைப்பந்து போட்டி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

போட்டியில் மெத்தா, கருணா, முதிதா மற்றும் உபேக்கா ஆகிய நான்கு அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இறுதிப் போட்டியில் மெத்தா மற்றும் முதிதா அணிகள் மோதியதில் மெத்தா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெற்றியீட்டியது.

சம்பியன் அணியின் தலைவி ஜெயத்ரி உபேந்திரா பிரதம அதிதி விளையாட்டு தகவல் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் திலான் ரங்கனவிடம் இருந்து வெற்றி கிண்ணத்தையும், இரண்டாம் இடத்தை பிடித்த அணியின் தலைவி ருச்சிரா யாபா அபேவர்தன முன்னாள் ஆசிரியர் துலா டி சில்வாவிடம் இருந்து விருதையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் சிறந்த வீராங்கனையாக முதிதா அணியின் சமிலா செனவிரத்ன மற்றும் சிறந்த சூட்டரா மெத்தா அணியின் ஜெயத்ரி உபேந்திரா ஆகியோர் திட்ட அமைப்பாளர் அனுஜா டி சில்வா மற்றும் பழைய மாணவி ஷிரோமி தில்ருக்ஷி ஆகியோரிடமிருந்து விருதுகளைப் பெற்றனர்.

ருசெயிக் பாரூக்

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை