வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராணுவத்தினர் குடிநீர் விநியோகம்

கிளிநொச்சியில் உமையாள்புரம் மக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் கிராம சேவகர் அலுவலர் பிரிவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட சுமார் 300 குடும்பங்களுக்கே இராணுவத்தினர் குடிநீர் வழங்கி வருகின்றார்கள்.

உமையாள்புரம் பிரதேசம் உவராலும், வரட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசம் என்பதனால் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் குடிநீர் விநியோகிக்க வேண்டிய பிரதேசமாகும்.

எனவே இங்கு திணைக்களங்களால் வழங்கப்படுகின்ற குடிநீர் போதுமானதாக இன்மையால் இராணுவத்தினரும் மேலதிகமாக குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை