ஓவியம் வரைதல் போட்டியாளர்கள் தெரிவு

அரச சிறுவர் ஓவிய விழா -2019 ஓவியம் வரைதல் போட்டியாளர்களுக்கான இரண்டாங்கட்ட தெரிவு அம்பாறை சிறி இந்திரசார வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக்கழகம் மற்றும் அரச கட்புல கலை ஆலோசனைக் குழு என்பன இணைந்து 'ஓவியம் வரைதல்' போட்டியை ஏற்பாடு செய்துள்ளன.

அம்பாறை மாவட்ட மட்ட முதலாம் கட்டப் போட்டி ஏற்கனவே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. முதலாம் கட்டப் போட்டியின் போது, திறமையை வெளிப்படுத்திய இளம் ஓவியர்களிலிருந்து, இரண்டாம் கட்டப் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அரச சிறுவர் ஓவியம் மற்றும் சிற்பக் குழுவின் செயலாளர் அனில் அத்தபத்து தலைமையில் 'ஓவியம் வரைதல்' போட்டி இடம்பெற்றதாகவும், இப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூவின போட்டியாளர்கள் பங்குபற்றியதாகவும் அம்பாறை மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.எம்.றின்ஸான் தெரிவித்தார். இரண்டாங்கட்டப் போட்டியின் போது வரையப்பட்ட ஓவியங்கள் சர்வதேச சிறுவர் தினமான, எதிர்வரும் ஓக்டோபர் 01ம் திகதி கொழும்பு அபேகம வளாகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை