கிராண்ட்பாஸ் கத்திக்குத்து; மூவர் கைது

கொழும்பு, மாதம்பிட்டி மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று  (15) பிற்பகல் 4.00 மணியளவில் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்த நபர்களினால்,இருவர் மீது கூரிய ஆயுதம் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த குறித்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில், 'ஆனமாலு ரங்க' எனும் 39 வயது பாதாள குழு உறுப்பினர் ஒருவரும் 22 வயதான மற்றொருவருமேமரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

இச்சந்தேகநபர்கள் தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து கொட்டாஞ்சேனை, சமித்புர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்குற்றத்தை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Fri, 08/16/2019 - 08:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை