ஹபரண – தம்புள்ளை வீதியில் விபத்து: மூவர் பலி

ஹபரண – தம்புள்ளை வீதியில் மீகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  

தம்புள்ளையிலிருந்து ஹபரண பகுதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேனொன்றும், எதிர்த்திசையில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமொன்றும் நேருக்குநேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (15)  இடம்பெற்ற இவ்விபத்தின்போது, வேனில் பயணித்த  பெண்கள் இருவர் மற்றும் வேன் சாரதி ஆகியோர்  உயிரிழந்துள்ளனர். அத்தோடு, இவ்விபத்தில் படுகாயமடைந்த ஆணொருவரும் பெண்ணொருவரும் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருணாகலை, பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33, 40, 27 ஆகிய வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தை தொடர்ந்து குறித்த டிப்பர் வாகனச் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Fri, 08/16/2019 - 08:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை