லொறி வீதியை விட்டு விலகி விபத்து; ஐவர் படுகாயம்

தலவாக்கலையிலிருந்து டயகம பகுதிக்கு கோதுமை மா பொதிகளை ஏற்றிச்சென்ற கனரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் நாகசேனை பகுதியில் வைத்தே, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்கும் போதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறி சாரதியும், 5 உதவியாளர்களும் பலத்த காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கனரக லொறியில் இருந்த கோதுமை மா பொதிகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை