திருக்கோவில், பொத்துவில் பிரதேசங்களில் குடிநீர்ப்பிரச்சினை

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள கஞ்சிகுடிச்சாறு, காஞ்சிரன்குடா, தங்கவேலாயுதபுரம் ஸ்ரீவள்ளிபுரம் மண்டானை குடிநிலம் சாகாமம் தாண்டியடி ,நேருபுரம் பொத்துவில் பிரதேசத்திலுள்ள சங்குமண்கண்டி, மணற்சேனை, கோமாரி போன்ற பிரதேசங்கள் குடிநீரின்றி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சங்குமண்டியைச்சேர்ந்த சந்திரகுமார்யுவசுதா மற்றும் சாமித்தம்பி இராஜேஸ்வரி ஆகியோர் கருத்துரைக்கையில்:

இங்குள்ள கிணறுகள் யாவும் வற்றிவிட்டன. வவுசரில் தண்ணீர்தருகிறார்கள். 2பூளி தருவது போதுமானதல்ல. தேர்தலுக்கு வந்த எம்.பி. தம்பிமாரை இப்போது காணமுடிவதில்லை. தமிழரின் தலைவிதி அதுதான் என்றார்கள்.

திருக்கோவில் பிரதேசத்தில் பின்தங்கிய பகுதிகளிலுள்ள பொதுமக்கள் குடிநீரின்றி அலைவதாக தகவல்கள் கிடைக்கின்றனவே . அதுபற்றி என்ன தெரிவிக்கிறீர்கள் என திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் இராசையா வில்சன் கமலராஜனிடம் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்;.

வரட்சியாலும் குழாய்நீர் துண்டிப்பாலும் திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பூரணமாக குடிநீரை விநியோகம் செய்ய எமது சபையிடம் போதுமான பவுசர் வாகனவசதிகள் இல்லை. எமது பிரதேசத்திற்கு பிரதானமாக குடிநீரை விநியோகிக்கின்ற சாகாமம் நீர்சுத்திகரிப்பு மையம் கடந்த 3 மாதகாலமாக குழாய்நீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளது என்றார்.

 

காரைதீவு குறூப் நிருபர்

 

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை