இ.போ.ச. பஸ் - வான் விபத்து 31 பயணிகள் படுகாயம்

6 பேரின் நிலை கவலைக்கிடம் தம்புள்ள- திகம்பதானயில் சம்பவம்

வானொன்றுடன் நேருக்கு நேர் மோதிய இ.போ.ச.பஸ் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியில் புரண்டு குடை சாய்ந்ததில் பஸ் வண்டியில் பயணித்த 08 பெண்கள் உட்பட 26 பேரும் வேனில் பயணித்த 08 பேரில் ஐவருமாக 31 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் ஹபரணை வைத்தியசாலை மற்றும் தம்புள்ள டென்ஸில் கொப்பேகடுவ வைத்தியசாலை என்பவற்றில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாகக் உள்ளதாகவும் சிகிரியா பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இ.போ.ச.பஸ் வண்டியும், திருகோணமலையிலிருந்து மஹரகம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றும் இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ் விபத்து தம்புள்ள- ஹபரணை பிரதான வீதியில் திகம்பதான பிரதேசத்தில் நேற்று (23) அதிகாலை 6.15 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

தம்புள்ள தினகரன் நிருபர்

Sat, 08/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை