அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களான பைஸால் காசிம் மற்றும் அலி சாஹிர் மெளலானா ஆகியோர் நேற்று மீண்டும் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.
நேற்று(23) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அதற்கமைய மொஹமட் காசிம் மொஹமட் பைஸால்
சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சராகவும் அலி சாஹிர் மெளலானா ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர்.
Sat, 08/24/2019 - 06:00
from tkn