கிளிநொச்சி, ஜெயந்திநகரில் தாய், மகன் வெட்டிக் கொலை

கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று முன்தினமிரவு இடம்பெற்றிருக்கலாமெனப் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் வசிக்கும் தற்காலிக வீட்டிலிருந்தே நேற்றுக் காலை இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவத்தில் 70 வயது மதிக்கதக்க விஷ்ணுகாந்தி வள்ளியம்மை என்ற  தாயாரும், அவரது மகனான 34 வயதான விஷ்ணுகாந்தி லிங்கேஷ்வரன் என்ற நபருமே வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி குற்றத் தடுப்பு பொலிஸார் விரிவாக முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Wed, 07/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை