அக்கரபத்தனை பெருந்தோட்டத்தில் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை

அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றது. அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்று அதிகாரி,தோட்ட

முகாமையாளர்கள்,தோட்ட கமிட்டி தலைவர்கள்,தலைவிமார்கள்,வாலிப காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இ.தொ.கா வின் முக்கியஸ்தர்கள் நேற்று இக்கலந்துரையாடலில கலந்து கொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

 

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை