பாலமா, மரணப் பொறியா?

அக்கரபத்தனை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவிகளான இரண்டு சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் பாதுகாப்பற்ற பாலத்தைக் கடந்துசென்றபோதே நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள மற்றொரு பாலத்தையே படத்தில் காண்கிறீர்கள். ஊட்டுவள்ளி தோட்டத்திற்குச் செல்லும் வழியை ஊடறுக்கும் இது பாலமா, அல்லது மற்றொரு மரணப் பொறியா? என்பதற்கான விடை தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர். அரசியல்வாதிகள் இந்நிலைமை தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டுமென்றும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை