குரு பூர்ணிமா தினம் அனுஷ்டிப்பு

இறைவனே குரு வடிவில் வருகிறார் எனும் ஸ்ரீ ராமகிருஷணரின் வாக்கியத்திற்கிணங்க மட்டக்களப்பு கல்லடி ராமகிருஷ்ணமிசன் ஆச்சிரம மாணவர்களால் குரு பூர்ணிமா தினம் நேற்று முன்தினம் (16) கொண்டாடப்பட்டது.

ராமகிருஷ்ணமிசன் ஆச்சிரமப் பொறுப்பாளர் சுவாமி தக்ஷஜானந்தர் மகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொடியேற்றம், பூஜை, பஜனை,மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் பழைய மாணவர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

ராமகிருஷ்ணமிசன் பக்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இத்தினத்தையொட்டி ஆன்மிக நூல்களும் 15 வீத விலைக்கழிவில் விற்பனை செய்யப்பட்டன.

(மட்டக்களப்பு விசேட நிருபர்)

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை