அணுசக்தி கண்காணிப்பு குழு தலைவர் மரணம்

உலகளாவிய அணுசக்தி கண்காணிப்புக் குழுவின் தலைவர் யுகியா அமானோ தனது 72 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் அணுசக்தி நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த அவர் சுகவீனம் காரணமாக கடந்த மார்ச்சில் அந்தப் பதவியில் இருந்து விலகினார். அவரது காலப்பகுதியிலேயே ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது.

இந்நிலையில் அணுசக்தி நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார் என்பது இன்னும் உறுதியில்லாமல் இருப்பதோடு அதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த வாரமே ஆரம்பிக்கப்பட்டது.

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை