அடுத்த உலகக் கிண்ணம் குறித்து திமுத் நம்பிக்கை

2019 உலகக் கிண்ணம் துரதிஷ்டவசமானது என குறிப்பிட்ட இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, 2023 உலகக் கிண்ணத்திற்கு சிறப்பான திட்டம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன கூறியதாவது, 2023 உலகக் கிண்ண தொடருக்கான சிறப்பான அணியை உருவாக்க இலங்கை கிரிக்கெட் சபை ஆர்வமாக உள்ளது.

2015 உலகக் கிண்ணத்திற்கு பின்னர் நாங்கள் சிறந்த அணியை உருவாக்க ஆரம்பித்தோம். ஆனால், துரதிஷ்டவசமாக தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் விளையாடவில்லை. பல வீரர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த உலகக் கிண்ணத்திற்கு பின்னர் நாங்கள் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி, ஒரு நல்ல செயல்திறனைக் கொடுக்கக்கூடிய வீரர்களை அடையாளம் காண முயற்சிக்கிறோம். அடுத்த உலகக் கிண்ணத்திற்கு ஒரு திடமான 15 வீரர்களை உருவாக்க முயற்சிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை