சட்டவிரோதமாக மீன்பிடித்த 16 பேர் கைது

திருகோணமலை, நாயாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களே நேற்று (04) கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

குச்சவெளி மற்றும் இறக்கண்டி ஆகிய பகுதிகளைச்  சேர்ந்த 20 வயது முதல் 64 வயது வரையானவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதோடு,  அவர்களிடமிருந்து 07 டிங்கி படகுகள், 07 இன்ஜின்கள் மற்றும் 13 மீன்பிடி வலைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மீன்பிடித் திணைக்களத்தின் உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையின் தெரிவித்தனர்.

Fri, 07/05/2019 - 12:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை