சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

வட மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 60கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்திலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில்  பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

Sat, 07/06/2019 - 09:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை