ஹற்றன் ஸ்ரீபாத கல்லூரிக்கு பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாத கல்லூரிக்கு பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. இவ்வேலைத்திட்டம் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்காக 11 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஹற்றன் ஸ்ரீபாத கல்லூரியின் பழைய மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கல்லூரியின் பாதுகாப்பு கருதி வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.உதயகுமார் எம்.ராம், சோ. ஸ்ரீதரன், ஹற்றன், டிக்கோயா நகரசபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(ஹற்றன் சுழற்சி நிருபர்,
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் )
from tkn