ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ஜெனீவா பயணம்

ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஜெனீவா உலக தொழிலாளர் சம்மேளனம் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்கு மத்திய மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் கிரிஷாந் கடந்த புதன்கிழமை ஜெனீவா பயணமானார்.

இவர் நேற்றும், இன்றும் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களில் கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார். ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஜெனீவா உலக தொழிலாளர் சம்மேளனம் ஆகியவற்றில் கலந்து கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, அடிப்படை பிரச்சினைகள், மனித உரிமை மீறல்கள், மலையக ஆசிரியர்களுக்கு காணி உரிமை போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உரையாற்றவுள்ளார். இக்கலந்துரையாடலில் உலகில் பல நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலவாக்கலை குறூப் நிருபர்

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை