கணித பாடத்திற்கான நியமனம் பெறாத போதிலும் கணிதத்தை ஒரு பாடமாக கற்பிக்கின்ற ஆசிரியர்களை, கணிதம் கற்பித்தல் தொடர்பான உயர் சான்றிதழ் பாடநெறிக்கு சேர்த்துக்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவகம் மூலம் நடாத்தப்படவுள்ள மேற்படி பயிற்சிநெறிக்கு 100பேர் தமிழ், சிங்கள மொழி மூலம் இணைத்துக்கொள்ளப்படுவர்.
அரசாங்க பாடசாலையில் தரம் ஆறு முதல் க.பொ.த சாதாரண தர வகுப்புக்களில் கணித பாடத்தை ஐந்து வருடம் கற்பித்த கணித பாட நியமனம் இல்லாத ஆசிரியர்கள் மேற்படி பாடநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
தெரிவு பரீட்சை மூலம் தகுதியானோர் பயிற்சி நெறிக்கு தெரிந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய இறுதித் தினம் ஜூன் 28 ஆம் திகதியாகும். விண்ணப்பங்களை கல்வி அமைச்சின் கணிதக் கிளைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது குறூப் நிருபர்
from tkn