காற்றுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்ப்பு

நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலைமைபடிப்படியாக உருவாகி வருவதோடு,நாடு முழுவதும் (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகின்றது.

கம்பஹா, கொழும்பு, புத்தளம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக, பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான  பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக,மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர்  வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.  

எனவே, மின்னல் தாக்கத்திலிருந்து பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

Fri, 06/07/2019 - 09:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை