ஆணைக்குழு இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் நேற்று கையளிப்பு

அரச நிறுவனங்களில் ஊழல், மோசடிகள்;

2015 ஜனவரி 15 ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச மற்றும் நியாயாதிக்க சபைகளில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல், மோசடி, நம்பிக்கைத் துரோகம், அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தல், ஏமாற்றுதல்கள், அரச அதிகாரங்கள், சொத்துக்கள் மற்றும் வரப்பிரசாதங்களின் முறையற்ற பாவனை அல்லது துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று (06) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.  

ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவினால் ஜனாதிபதியிடம் அறிக்கை வழங்கப்பட்டதுடன், ஏனைய உறுப்பினர்களாகிய ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

2015 ஜனவரி 15 ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச மற்றும் நியாயாதிக்க சபைகளில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல், மோசடி, நம்பிக்கைத் துரோகம், அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தல், ஏமாற்றுதல்கள், அரச அதிகாரங்கள், சொத்துக்கள் மற்றும் வரப்பிரசாதங்களின் முறையற்ற பாவனை அல்லது துஷ்பிரயோகம் ஆகியன தொடர்பாக சுமத்தப்பட்டிருக்கும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் பற்றிய பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ளுதலும் அவ்விடயங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற துரித விசாரணைகளை மேற்கொள்ளுதலும் இவ்வாணைக்குழுவின் செயற்பணிகளாகும்.  

Fri, 06/07/2019 - 09:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை