தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் குலதுங்க

தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டார்.

இது வரை காலமும் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டு வந்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர், சிசிர மெண்டிஸ் அண்மையில் தனது பதவியை இராஜினாமாச் செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ

ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் காலாற்படை ரெஜிமண்டின் பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, சப்புகஸ்கந்தையிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளை அதிகாரியுமாவார்.

ஸாதிக் ஷிஹான்

Fri, 06/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை