நுவரெலியாவில் புதிய மணிக்கூட்டு கோபுரம்

நுவரெலியா நகர மத்தியில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின்

நூற்றாண்டை முன்னிட்டும் மற்றும் நுவரெலியா உயன்ன கழகத்தின் 53 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டும் நுவரெலியா லயன்ஸ் கழகத்தினரால் அமைக்கப்பட்ட புதிய மணிக்கூடு கோபுரத்தை

நேற்று முன்தினம் உத்தியோகப் பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் தலைவர் எம்.பி. சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் மஹேந்திர அமரசூரிய, சிறப்பு அதிதியாக நுவரெலியா மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன, நுவரெலியா மாநகர பிரதி முதல்வர் யசதர்தனா புத்திரசிகாமணி உட்பட லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்களும் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்துக்கொண்டனர்.

தலவாக்கலை குறூப் நிருபர்

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை