திருகோணமலையில் 24 மீனவர்கள் கைது

திருகோணமலை, மலைமுந்தல் கடற்பரப்பில்  சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 24 மீனவர்களை கடற்படையினர் நேற்று (22) கைதுசெய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்களையும்கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டிலேயே குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

அத்தோடு, அவர்களிடமிருந்து 04 டிங்கி படகுகள், 04 இஞ்சின்கள், 04 சட்டவிரோத மீன்பிடி வலைகளை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை  மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

Sun, 06/23/2019 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை